Wednesday, March 18, 2015

அடிமைத்தனம்

எப்போதும் பிறர் மூலமாகவே
நீங்கள் மகிழ்ச்சியோ துக்கமோ அடைகிறீர்கள்.
அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களுடைய கை பொம்மை ஆகி விடுகிறீர்கள்.
அவர்களிடம் உங்களை ஆட்டுவிக்கும் ரிமோட் கண்ட்ரோல்
உள்ளது .
அவர்கள் சிறிது முகம் சுழித்துப் பார்ப்பது கூட
உங்களை துன்பம் அடையச் செய்யும்.
அதைப்போல அவர்களுடைய ஒரு மகிழ்ச்சியான பேச்சே
ஒரு மகிழ்ச்சியான பார்வையே
உங்களை ஆனந்தத்தில் தள்ளும்.
ஆகவே நீங்கள் அடுத்தவர் கருணையில்தான் வாழ்கிறீர்கள்.
பெரும்பான்மையோர் அடிமை வாழ்வு தான்
வாழ்கின்றனர் .
அவர்கள் உங்கள் மகிழ்ச்சி , துக்கம் , அமைதி , துயரம்
இவற்றை அவர்கள் நிர்ணயிக்கும் போது
நீங்கள் எப்படி அமைதியாக ஆனந்தமாக இருக்க முடியும்?
சுதந்திரமானவராக இருங்கள் .
உங்கள் சந்தோசம் ,மகிழ்ச்சி , ஆனந்தம் எல்லாம்
உங்களைச் சார்ந்தே இருக்கட்டும் .
அப்போது மற்றவர்கள் யாரும் உங்களை
அடிமைப் படுத்த முடியாது .



--- ஓஷோ ---

No comments:

Post a Comment